Published : 20 Oct 2019 07:47 AM
Last Updated : 20 Oct 2019 07:47 AM

தேசிய திறனாய்வு தேர்வு ஹால்டிக்கெட் நாளை வெளியீடு

சென்னை

தேசிய திறனாய்வு தேர்வுக்கான ஹால்டிக்கெட்களை நாளை (அக்.21) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுத் துறை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2019-20-ம் கல்வி ஆண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர் களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு (என்டிஎஸ்இ) நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட் 22-ல் தொடங்கி செப்டம்பர் 7-ம் தேதி வரை நடந்தது.

இதையடுத்து தேசிய திற னாய்வு தேர்வுக்கு தகுதியான மாணவர்களின் ஹால்டிக்கெட்கள் நாளை தேர்வுத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்படும்.

பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள் ளலாம். இதுதவிர மாணவர்கள் பெயர் பட்டியலையும் தலைமை ஆசிரியர்கள் மேற்கண்ட இணைய தளம் வழியாகவே பதிவிறக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன. கூடுதல் தகவல்களை மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

இந்த தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு, உயர்கல்வி முடிக்கும் வரை மத்திய அரசின் கல்வி உதவித்தொகை மாதம் தோறும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x