Published : 18 Oct 2019 09:48 AM
Last Updated : 18 Oct 2019 09:48 AM
திருநெல்வேலி
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எஸ்.சந்தோஷ்பாபு வெளியிட்ட செய்திக்குறிப்பு.
பிளஸ் 1 மாணவர்களுக்காக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மருந்தாக்க வேதியியல் துறை சார்பில் 18-ம் தேதி (இன்று) முதல் 22-ம் தேதி வரைஅறிவியல் முகாம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது.
அறிவியல் ஆராய்ச்சியில் மாணவர்கள் ஊக்கம் மற்றும் உத்வேகம் பெறுவதற்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை நிதியுதவி மற்றும் மேற்பார்வையில் முகாம் நடத்தப்படுகிறது.
இதில் அறிவியல் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் உரையாற்றுகிறார்கள். இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்
களான இந்திய தொழில்நுட்பக் கழகம், இந்திய அறிவியல் கழகம், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கழகம், மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து சொற்பொழிவாளர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்கள்.
முகாமில் 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கிறார்கள். முகாமின் நிறைவு பகுதியாக 22-ம் தேதி அன்று மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு, மாணவர்கள் அழைத்து செல்லப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT