Published : 18 Oct 2019 07:14 AM
Last Updated : 18 Oct 2019 07:14 AM

அசாமில் இந்தியா - வங்கதேச அதிகாரிகளின் உயர்மட்ட கூட்டம்

குவாஹாட்டி

இந்தியா - வங்கதேச உயர் அதிகாரிகள் கூட்டம் அசாம் மாநிலம் குவாஹாட்டியில் அடுத்த வாரம் நடக்கவுள்ளது.

மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் வங்கதேச அரசின் பிரதிநிதி திப்பு முன்ஷி ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர். அப்போது, இருநாடுகளுக்கு இடையில் சரக்கு போக்குவரத்து குறித்த ஒப்பந்தமாக உள்ளது. இதில் வங்கதேச பிரதமரின், 2 நிதி ஆலோசகர் உட்பட 70 பேர் ஆலோசனை செய்யவுள்ளனர்.

வெளியுறவுத் துறை, வர்த்தகம், சாலை போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து போன்ற மத்திய அரசு துறையின் மூத்த அதிகாரிகள் கலந்துக் கொள்ளும் இரண்டு நாள் கூட்டம் குவாஹாட்டியில் அக். 22, 23-ல் நடக்கிறது.

சரக்கு போக்குவரத்து ஒப்பந்தம் மூலம் வங்கதேச நாட்டுடன் மட்டுமன்றி தென் கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் வர்த்தம் செய்ய எளிமையாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்று அசாம் மாநில தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் சந்தர மோகன் பதோவரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x