Published : 17 Oct 2019 10:27 AM
Last Updated : 17 Oct 2019 10:27 AM

ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கு ஸ்பெயின் அணி தகுதி

ஸ்டாக்ஹோம்:

ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கு ஸ்பெயின் அணி தகுதி பெற்றுள்ளது.

ஐரோப்பிய கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. இதில் ஸ்டாக்ஹோம் நகரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஸ்வீடன் அணியை எதிர்த்து ஸ்பெயின் மோதியது.

இப்போட்டியின் 5-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீரர் பெர்க், ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலையை ஏற்படுத்திக் கொடுத்தார். இதைத் தொடர்ந்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டுவர ஸ்பெயின் வீரர்கள் கடுமையாக போராடினர். ஆனால் அவர்களின் முயற்சிகளை ஸ்வீடன் வீரர்கள் தடுத்தனர். இதனால் ஆட்ட நேரத்தின் இறுதிவரை ஸ்வீடன் அணியே முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ஸ்பெயின் அணி வீரர் ரோட்ரிகோ, ஒரு கோல் அடித்து, 1-1 என்ற கோல்கணக்கில் ஆட்டத்தை சமன் செய்தார். இந்த ஆட்டம் சமநிலையில் முடிந்ததைத் தொடர்ந்து ஸ்பெயின் அணி, ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது.

‘டி’ பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் சுவிட்சர்லாந்து அணி 2-0 என்ற கோல்கணக்கில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் அயர்லாந்து அணிக்காக செபரோவிக் 16-வது நிமிடத்திலும், டஃபி 92-வது நிமிடத்திலும் கோல் அடித்து வெற்றிக்கு உதவினர். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x