Published : 17 Oct 2019 10:05 AM
Last Updated : 17 Oct 2019 10:05 AM

டெல்லியில் மாற்றுத் திறனாளிகளுக்கு  விலக்கு

புது டெல்லி

டெல்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வாகனங்களை இயக்க ஒற்றை- இரட்டை பதிவு எண் என்ற திட்டம் உள்ளது. அதில் மாற்றுத்திறன் உள்ள நபர்களுக்கு இந்த திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

சாலை பங்கீட்டுத் திட்டம் 4 நவம்பர் 2015-ல் இருந்து 3-வது முறையாக கட்டுப்பாடு திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும், ஒற்றை - இரட்டை பதிவு எண் திட்டத்தில் இருந்து பெண்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x