Published : 17 Oct 2019 10:00 AM
Last Updated : 17 Oct 2019 10:00 AM
புதுடெல்லி:
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செல்போன், இணையதளம் போன்ற சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பானது என்றும், இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவானது, நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காஷ்மீரில் ‘போஸ்ட்பெய்ட்' செல்போன் சேவைகள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. அதிலும் எஸ்எம்எஸ் சேவை ரத்து செய்யப்பட்டு விட்டது என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, தொலை தொடர்பு விவகாரத்தில் கட்டுப்பாடுகள் தொடர்பான உத்தரவுகளை அறிக்கையாக சமர்ப்பிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT