Published : 16 Oct 2019 07:43 AM
Last Updated : 16 Oct 2019 07:43 AM

உலகில் முதல் முறையாக டாக்சிபோட்டை அறிமுகப்படுத்திய ஏர் இந்தியா விமான நிறுவனம்

விமானத்தை நிறுத்தும் இடத்திலிருந்து ஓடு பாதைக்கு குறைந்த எரிபொருளில் இழுத்துச் செல்லும் டாக்சிபோட்டை சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தி உள்ளனர்.

புதுடெல்லி

டாக்சிபோட் எனப்படும் விமானதை இழுத்துச் செல்லும் வாகனத்தை முதல்முறையாக ஏர்-இந்தியா நிறுவனம் பயன்படுத்தி சாதனை செய்துள்ளது. பயணிகள் விமானம் தரை இறங்கிய பின்னர், வாகன நிறுத்துமிடத்துக்கு செல்லவும், அங்கிருந்து மீண்டும் ஒடுபாதைக்கு வருவதற்கும் அதிக எரிபொருள் செலவாகிறது.

இதனால், விமானத்தை நகர்த்த குறைந்த எரிசக்தியை பயன்படுத்தும் ‘டாக்சிபோட்’ என்ற பாதி ரோபோட் வாகனத்தை இஸ்ரேல் ஏர்ஸ்பேஸ் நிறுவனம் உருவாக்கி இருந்தது.

ஆனால், இந்த கண்டுபிடிப்பில் ஆபத்து இருப்பதாக எந்த நாடும் இதை பயன்படுத்த முன்வரவில்லை. ஆனால், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், ஏ-320 ரக பயணிகள் விமானத்தில் முதல்முறையாக டாக்சிபோட்டை பயன்படுத்தியுள்ளனர்.

85 சதவீத எரிபொருள் மிச்சம் இதுகுறித்து ஏர்-இந்தியா நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், “டாக்சிபோட்டை பயன்படுத்தியதால், 85 சதவீத எரிபொருள் மிச்சம் செய்யப்பட்டுள்ளது. தற்போது விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் விமானத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உண்மையாகவே சாதனைதான்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x