Published : 15 Oct 2019 11:13 AM
Last Updated : 15 Oct 2019 11:13 AM

டெங்கு கொசு கடிக்காமல் இருக்க உ.பி அரசு யோசனை

லக்னோ

உத்தரபிரதேச மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் 454 பேர் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.

அதில் பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்கள், கொசு கடியில் இருந்து தங்களை பாதுகாக்க, முழுக்கை சட்டை மற்றும் பேண்ட் அணிந்து வர அரசு அதிகாரிகளின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. அதேபோல், பள்ளி வளாகங்களை சுத்தமாக வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x