Published : 14 Oct 2019 12:51 PM
Last Updated : 14 Oct 2019 12:51 PM
புதுடெல்லி
டெல்லி துவாரகாவில் உள்ள ராஜ்கியா பிரதிபா விகாஸ் வித்யாலயா (ஆர்பிவிவி) என்ற அரசுப் பள்ளியை நாட்டிலேயே முதன்மை பள்ளியாக மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. இந்த பள்ளியானது, மாணவர்களின் வளர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல், ஆசிரியர்களின் திறன்களை வெளிக்கொண்டு வர, ஆசிரியர்களின் புதிய கண்டு
பிடிப்பாக பல திட்டங்களை கொண்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.பி.சிங். கூறியதாவது:
பள்ளியின் முகப்பிலே, விதை சேகரிக்கும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பழ வகைகளை சாப்பிட்ட பின்னர், அதன் விதைகளை மாணவர்கள் இந்த விதை பெட்டியில் போடுகிறார்கள். மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக இப்பள்ளி கடைபிடிக்கிறது. மாணவிகளுக்கு, கிஷோரி யோஜனா திட்டத்தின்படி இயற்கை
முறையில் செய்யப்பட்ட நாப்கின் வழங்கப்படுகிறது. தேர்ச்சி பெறாத மாணவர்களை அழைத்து, தனிப்பட்ட முறையில் மீண்டும் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. மேலும், 3 அல்லது 4 ஆசிரியர்கள் குழுவாக இணைந்து, சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்கூட எழுத படிக்க முடியாமல் இருக்கிறார்கள். அவர்களை தேர்வு செய்து, ‘சவால் கல்வி’ முறையில் கற்பிக்கப்படுகிறார்கள். வாரம் ஒருமுறை பெற்றோர் - ஆசிரியர்களை ஒருங்கிணைத்து ஆலோ சனைக் கூட்டம் நடத்துகிறோம். நாட்டில் உள்ள சிறந்த அரசு பள்ளி மாணவர்களை தொழில் முனைவோ
ராக்க மத்திய அரசு ஒரு பள்ளிக்கு ரூ. 2,78,000 நிதி ஒதுக்கியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலீட்டு தொகையாக தலா ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதன்மூலம் பல மாணவர்கள் சிறு சிறு நிறுவனங்களை தொடங்கியுள்ளனர். மாணவர்களுக்கு புதுமையான முறையில் எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் நினைக்கிறார்களோ, அதற்கு நிதி ஒதுக்கப்படுகிறது.
இதனால், அதிநவீன முறையில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. 12-ம் வகுப்பில், 500-க்கு 437தான் எங்கள் பள்ளியின் சராசரி மதிப்பெண். அதேபோல், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் சராசரி மதிப்பெண் 441. மாஸ்கோவில் இந்த ஆண்டு நடந்த சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் எங்கள் மாணவர்கள் வெண்கலப் பதக்கம் பெற்றனர். இவ்வாறு தலைமை ஆசிரியர் ஆர்.பி.சிங் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT