Published : 14 Oct 2019 07:06 AM
Last Updated : 14 Oct 2019 07:06 AM

நேபாளத்துக்கு ரூ.5,600 கோடி சீன அதிபர் நிதியுதவி

காத்மாண்டு

சீன அதிபர் ஜி ஜின்பிங், தமிழகத்தின் மாமல்லபுரத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்தார். மாமல்லபுர கடற்கரைச் சிற்பங்களை கண்டு ரசித்தார். பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சனிக்கிழமை நேபாளம் சென்றார்.

அங்கு நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரியுடன் சீன அதிபர் ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் சீனா - நேபாளம் இடையே பல்வேறு துறைகளில் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

அதன்பின் சீன அதிபர் கூறும்போது, ‘‘நேபாள நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு நேபாள ரூபாயில் 5,600 கோடி ரூபாயை சீனா வழங்கும். இந்தத் தொகை அடுத்த 2 ஆண்டுகளில் வழங்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x