Published : 11 Oct 2019 08:58 AM
Last Updated : 11 Oct 2019 08:58 AM

அரியலூர் அரசு பள்ளியில் காந்தி புகைப்பட கண்காட்சி

அரியலூர்

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த கண்காட்சியை பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், "ஆங்கிலேயேர்களுக்கு எதிராகப் போராடும் உணர்ச்சியை மக்களிடத்தில் ஏற்படுத்தியவர் காந்தி. அவரது தியாகம், எளிமை, அகிம்சை குறித்து இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளவே இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது" என்றார்.

காந்தியின் வாழ்க்கை வரலாறு, தேசப்பற்று, நாட்டுக்கு அவர் ஆற்றிய அரும்பணிகள் உள்ளிட்ட நிகழ்வுகளை விளக்கும் படங்கள் காட்சிப்படுத்தபட்டிருந்தன.

அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு, மகாத்மா காந்தி ஆற்றிய அரும்பணிகளை தெரிந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் நகர காங்கிரஸார் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x