Published : 10 Oct 2019 09:59 AM
Last Updated : 10 Oct 2019 09:59 AM
புதுடெல்லி
பாகிஸ்தான் ஆக்கிரமைப்பு காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களுக்கு மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு மறு வாழ்வு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.5.5 லட்சம் வரை வழங்
கப்படுகிறது.
காஷ்மீரில் வசிக்கும் 5,300 குடும்பங்கள் இந்த திட்டத்தின் இருந்து விடுவிக்கப்பட்டவிட்டதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாக கவுன்சில் கூறி இருந்தது. இந்நிலையில், விடுபட்ட 5,300 குடும்பங்களுக்கு, திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.
இதுகுறித்து டில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறுகையில், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
பகுதிகளிலிருந்து, ஜம்மு -காஷ்மீர் அல்லாத, பிற மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்த 5,300-க்கு மேற்பட்ட குடும்
பங்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இவர்களும் ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்களாகவே கருதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இவர்கள் இதுநாள் வரை அவ்வாறு கருதப்படவில்லை. இந்த வரலாற்று பிழையை திருத்தி, இந்த 5,300 குடும்பங்களையும் ஜம்மு -காஷ்மீரிலிருந்து புலம்பெயர்ந்தவர்களாக கருதி, இக்குடும்பங்ளுக்கு தலா 5.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஜம்மு -காஷ்மீர் மாநிலத்துக்கான பிரதமரின் வளர்ச்சித் திட்ட நிதியிலிருந்து இந்த இழப்பீடு வழங்கப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT