Published : 09 Oct 2019 10:11 AM
Last Updated : 09 Oct 2019 10:11 AM

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பாராட்டு விழா

சென்னை

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு சென்னையில் வேலம்மாள் பள்ளி குழுமம் சார்பில் நாளை (வியாழக்கிழமை) பாராட்டு விழா நடைபெறுகிறது.

இந்த ஆண்டு உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றவர் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து. உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாறையும் அவர் படைத்துள்ளார்.

சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகள் புரிந்து வரும் பி.வி.சிந்துவை கவுரவிக்கும் வகையில் வேலம்மாள் கல்வி குழுமம் சார்பில் சென்னையில் நாளை (வியாழக்கிழமை) பாராட்டு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி முகப்பேர் கிழக்கு டிஎஸ் கிருஷ்ணா நகரில் உள்ள வேலம்மாள் நிறைநிலை பள்ளி வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும்.

இவ்விழாவில், சர்வதேச அளவில் சாதனை புரிந்த வேலம்மாள் பள்ளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள ஊக்கத்தொகையை சிந்து வழங்கி கவுரவிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x