Published : 09 Oct 2019 09:36 AM
Last Updated : 09 Oct 2019 09:36 AM

கும்பக்கரையில் சுற்றுலா பயணி தவறவிட்ட ‘பர்ஸை’ வனத்துறையிடம் ஒப்படைத்த சிறுவர்கள்

பெரியகுளம்

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணி தவற விட்ட `மணி பர்ஸை'கண்டெடுத்த சிறுவர்கள் அதை வனத்துறை யினரிடம் ஒப்படைத்தனர்.

பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளத்தைச் சேர்ந்த பாஸ்கர சேதுபதி (11) மற்றும் பிரதீப்சேதுபதி (8) இருவரும் லட்சுமிபுரம் ரேணுகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6 மற்றும் 3-ம் வகுப்பில் படித்து வருகின்றனர்.

இச்சிறுவர்கள் தனது தந் தை பாண்டியுடன் பைக்கில் கும்பக்கரை அருவிக்கு நேற்று காலை சென்றனர். அப்போது வழி யில் `மணி பர்ஸ்' ஒன்று கிடந்தது . இதைப் பார்த்த சிறுவர்கள் தங்கள் தந்தையின் வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு அதனை எடுத்தனர். அருகில் இருந்தவர் களிடம் விசாரித்தபோது அது தங்க ளுடையது இல்லை எனக் கூறினர்.

பின்னர் `மணி பர்ஸை' திறந்து பார்த்தபோது பணம், மலேசியா காசு, பெட்ரோல் பில் இருந்தது. பில்லில் உள்ள எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது வாகனம் குறித்த விவரம் தெரியாது என்று பதில் வந்தது.

இதையடுத்து கும்பக்கரை வனக்காவலர் யேசுமணியிடம் இந்த பர்ஸை ஓப்படைத்தனர். அதைப் பெற்றுக்கொண்ட வன அலுவலர்கள் சிறுவர்களைப் பாராட்டினர்.

மேலும் இப்பொருளைத் தவறவிட்டவர் உரிய ஆவ ணத்துடன் தேவதானப்பட்டி வனச்சரகத்தில் தெரிவித்துப் பெற்றுக்கொள்ளலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x