Published : 09 Oct 2019 09:06 AM
Last Updated : 09 Oct 2019 09:06 AM
ஷாங்காய்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இங்கிலாந்து வீரரான ஆண்டி முர்ரே வெற்றி பெற்றார்.
இங்கிலாந்தின் பிரபல டென்னிஸ் வீரராக இருப்பவர் ஆண்டி முர்ரே. ஒரு காலகட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரராக இருந்த முர்ரே, பின்னர் இந்த நிலையில் இருந்து பின்தங்கினார்.
இதற்கிடையே கடுமையான இடுப்பு வலியால் அவர் பாதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு இடுப்பில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக கடந்த சில காலமாக அவர் டென்னிஸ் போட்டிகளில் ஆடவில்லை .
இதனால் ஒரு கட்டத்தில் தரவரிசையில் அவர் மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டார். இடுப்பு அறுவைச் சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறிய அவர், ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றார். திங்கள்கிழமை நடந்த முதல் சுற்றுப் போட்டியில், அர்ஜென்டினா வீரரான ஜுவான் இக்னேஷியோ லோண்டெரோவை எதிர்த்து அவர் ஆடினார்.
இப்போட்டியில் முதல் செட்டை 2-6 என்ற புள்ளிக்கணக்கில் ஆண்டி முர்ரே இழந்தார். இருப்பினும் அடுத்தடுத்த செட்களில் ஆக்ரோஷமாக போராடிய முர்ரே, அவை இரண்டையும் கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து 2-6, 6-2, 6-3 என்ற செட்கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த வெற்றியின் மூலம், ஆண்டி முர்ரே தரவரிசைப் பட்டியலில் 250 இடங்களுக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT