குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்காக 4.50 லட்சம் மலர் நாற்றுகள் நடவுப் பணி

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்கான மலர் நாற்றுகள் நடவுப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்கான மலர் நாற்றுகள் நடவுப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.

Updated on
1 min read

குன்னூர்: நீல​கிரி மாவட்​டம் குன்னூர் சிம்ஸ் பூங்​கா​வில் கோடை சீசனுக்​காக 4 லட்​சத்து 50 ஆயிரம் மலர் நாற்​றுகள் நடவு செய்​யும் பணி தொடங்​கியது.

குன்​னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா நூற்​றாண்டு பழமை வாய்ந்​தது. இங்​குள்ள அரிய வகை மரங்​கள் மற்​றும் மலர்ச் செடிகள் ஆகியவை சுற்​றுலாப் பயணி​களை வெகு​வாக கவர்ந்து வரு​கின்​றன. ஆண்​டு​தோறும் ஏப்​ரல், மே மாதங்​களில் கோடை சீசன் நடை​பெறு​வது வழக்​கம்.

மே மாத இறு​தி​யில் பூங்​கா​வில் பழக் கண்​காட்​சி​யும் நடத்​தப்​பட்டு வரு​கிறது. இந்த ஆண்டு மே மாதம் இறு​தி​யில் 66-வது பழக் கண்​காட்சி நடை​பெற உள்​ளது.

இந்​நிலை​யில், குன்னூர் சிம்ஸ் பூங்​கா​வில் மலர் நாற்​றுகள் நடவு செய்​யும் பணி நேற்று தொடங்​கியது. சால்​வி​யா, டேலி​யா, பால்​சம், மேரி கோல்​டு, ஆஸ்ட்​டர், பேன்​சி, பிளாக்ஸ் உட்​பட்ட 125-க்​கும் மேற்​பட்ட ரகங்​கள் நடவு செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

அமெரிக்​கா, ஜப்​பான், பிரான்​ஸ், ஜெர்​மனி, நெதர்​லாந்து உள்​ளிட்ட பல்​வேறு நாடு​களி​லிருந்​தும் கொண்டு வரப்​பட்ட நாற்​றுக்​கள் நடவு செய்​யப்பட உள்​ளன. பூங்கா முழு​வதும் சுமார் 4 லட்​சத்து 50 ஆயிரம் மலர் நாற்​றுகள் நடவு செய்​யப்பட உள்​ளன.

நடவுப் பணியை தோட்​டக்​கலைத்​துறை இணை இயக்​குநர் சிபிலா மேரி தொடங்கி வைத்​தார். இந்​தப் பூக்​கள் வரும் கோடை சீசனில் பூத்​துக்​குலுங்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. சென்ற ஆண்​டை​விட இந்த ஆண்டு சுற்​றுலாப் பயணி​களின் வருகை அதி​கரிக்​கும் என்று தோட்​டக்​கலைத் துறை அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

<div class="paragraphs"><p>குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்கான மலர் நாற்றுகள் நடவுப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.</p></div>
ஹெச்.ராஜாவுக்கு பக்கவாத பாதிப்பு: அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in