இரண்டாம் சீசனுக்காக தயாராகும் ஊட்டி: நடவுத்தொட்டிகளில் பூத்துக் குலுங்கும் மலர்கள்

ஊட்டி தாவர​வியல் பூங்​கா​வில் இரண்டாம் சீசனுக்​காக தொட்டிகளில் நடவு செய்யப்பட்டிருந்த மேரி​கோல்டு உள்​ளிட்ட மலர்கள் தற்போது பூத்து குலுங்​கு​கின்​றன.  படம்: ஆர்.டி.சிவசங்கர்.

ஊட்டி தாவர​வியல் பூங்​கா​வில் இரண்டாம் சீசனுக்​காக தொட்டிகளில் நடவு செய்யப்பட்டிருந்த மேரி​கோல்டு உள்​ளிட்ட மலர்கள் தற்போது பூத்து குலுங்​கு​கின்​றன. படம்: ஆர்.டி.சிவசங்கர்.

Updated on
1 min read

ஊட்டி: ஊட்டி தாவர​வியல் பூங்​கா​வில் 2-ம் சீசனுக்​காக நடவு செய்​யப்​பட்ட மலர்த் தொட்டிகளில் மேரி​கோல்டு உள்​ளிட்ட மலர்​கள் பூத்து குலுங்​கு​கின்​றன.

நீல​கிரி மாவட்​டம் ஊட்​டியில் ஏப்​ரல், மே மாதங்​களில் கோடைசீசனை முன்​னிட்​டு, சுற்​றுலாப் பயணி​களை கவரும் வகை​யில் மலர் கண்​காட்​சி, ரோஜா காட்​சி,குன்​னூர் சிம்ஸ் பூங்​கா​வில் பழக்​காட்சி ஆகியவை நடத்​தப்​படு​கின்​றன.

இதே​போல, செப்​டம்​பர் மற்​றும் அக்​டோபர் மாதங்​களில் இரண்​டாம் சீசனுக்கு வட மாநில மற்​றும் வெளி​நாட்டு சுற்​றுலா பயணி​கள் வருகை அதி​க​மாக இருக்​கும் என்​ப​தால் தோட்​டக்​கலைத் துறை மூலம் சிறப்பு நிகழ்ச்​சிகள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. அதன்​படி, நடப்​பாண்டு ஊட்டி தாவர​வியல் பூங்​கா​வில் பூங்கா முழு​வ​தி​லும் உள்ள பாத்​தி​களில் மேரி​கோல்​டு, டேலி​யா, டெய்​சி, கேலண்​டுல்லா உட்பட பல்​வேறு வகை​யான மலர் நாற்​றுக்​கள் நடவு செய்​யப்​பட்​டுள்​ளன.

பூங்கா நுழைவு வாயில், ஜப்​பான் பூங்கா போன்ற பகு​தி​களி​லும் 4 லட்​சம் மலர் செடிகள் நடவு செய்​யப்​பட்​டுள்​ளன. ஜப்​பான் பூங்​கா​வில் அலங்​கார செடிகள் கொண்டு ‘ஐ லவ் ஊட்​டி’ போன்ற அலங்​காரமும் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. மேலும், 35 ஆயிரம் மலர்த்​தொட்​டிகள் தயார் செய்​யப்​பட்டு வரு​கின்றன.

இரண்​டாம் சீசனுக்​காக நடவு செய்​யப்​பட்ட தொட்​டிகளில் தற்​போது மலர்​கள் பூக்​கத்தொடங்​கி​யுள்​ளன. குறிப்​பாக, மேரி​கோல்டு மற்​றும் சால்​வியா மலர்​கள் பூத்து குலுங்​கு​வதை தொலை​வில் இருந்து சுற்​றுலா பயணி​கள் கண்டு ரசித்து செல்​கின்​றனர்.

விஜயதசமி, ஆயுத பூஜை என தொடர் விடு​முறை​கள் வரவுள்​ள​தால் நீல​கிரி மாவட்​டத்​துக்கு சுற்​றுலாப் பயணி​களின் வருகை அதி​கரிக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்த விடு​முறை காலத்​தில் இரண்​டாம் சீசனுக்​காக தயார்​படுத்​தப்​பட்ட தொட்​டிகள் மாடங்​களில் அடுக்கி வைத்​து, சுற்​றுலா பயணி​களின்​ ​பார்​வைக்​கு ​காட்​சிப்​படுத்​தப்​படும்​. இவ்​​வாறு தோட்​டக்​கலைத்​துறை அதி​காரிகள்​ தெரிவித்​தனர்​.

<div class="paragraphs"><p>ஊட்டி தாவர​வியல் பூங்​கா​வில் இரண்டாம் சீசனுக்​காக தொட்டிகளில் நடவு செய்யப்பட்டிருந்த மேரி​கோல்டு உள்​ளிட்ட மலர்கள் தற்போது பூத்து குலுங்​கு​கின்​றன.  படம்: ஆர்.டி.சிவசங்கர்.</p></div>
“இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதி” - அமைச்சர் ராஜ்மோகன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in