கொடைக்கானலில் பட்டம் விடும் திருவிழா

கொடைக்கானல் மன்னவனூரில் பறக்க விடப்பட்ட ராட்சத பட்டங்களை பார்த்து ரசித்த சுற்றுலாப் பயணிகள்.

கொடைக்கானல் மன்னவனூரில் பறக்க விடப்பட்ட ராட்சத பட்டங்களை பார்த்து ரசித்த சுற்றுலாப் பயணிகள்.

Updated on
1 min read

பழநி: கோடை விழாவையொட்டி கொடைக்கானல் அருகே மன்​னவனூரில் நடை​பெற்ற காற்​றாடி திரு​விழா​வில் பறக்க விடப்​பட்ட பலவித​மான பட்​டங்​கள் சுற்​றுலாப் பயணி​களை வெகு​வாக கவர்ந்​தன.

கொடைக்​கானலில் சுற்​றுலாத்​துறை சார்​பில் நடத்​தப்​படும் கோடை விழா நேற்று முன்​தினம் தொடங்​கியது. தின​மும் பல்​வேறு கலை நிகழ்ச்​சிகள், விளை​யாட்​டுப் போட்​டிகள் நடத்​தப்​படு​கின்​றன. அதன் ஒரு பகு​தி​யாக, சுற்​றுலா பயணி​களை கவரும் வகை​யில் கொடைக்​கானல் மேல்​மலை கிராம​மான மன்​னவனூர் ஏரிப்​பகு​தி​யில் ராட்சத பட்​டம் பறக்​க​விடும் திரு​விழா நேற்று தொடங்​கியது.

இந்​நிகழ்ச்​சி​யில் தேசி​யக் கொடி​யின் வண்​ணம், கார்ட்​டூன் பொம்​மை​கள், விலங்​கு​கள், பறவை​கள் என பல வித​மான ராட்சத பட்​டங்​கள் பறக்க விடப்​பட்​டன. விழா​வில் பங்​கேற்ற ஏராள​மான சுற்​றுலாப் பயணி​கள் வானத்​தில் பறந்த வண்​ணமய​மான பட்​டங்​களின் அழகை கண்டு ரசித்​தனர். மே 26-ம் தேதி வரை பட்​டம் பறக்​க​விடும் நிகழ்ச்சி நடை​பெறும்.

<div class="paragraphs"><p>கொடைக்கானல் மன்னவனூரில் பறக்க விடப்பட்ட ராட்சத பட்டங்களை பார்த்து ரசித்த சுற்றுலாப் பயணிகள்.</p></div>
“ஆட்சிப் பொறுப்பேற்று 2 வாரங்களே ஆகி இருந்தாலும்...” - கோவை சிறுமி படுகொலைக்கு பா.ரஞ்சித் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in