மாமல்லபுரம் மரகத பூங்காவில் ஒளிரும் தோட்டம்... திறப்பதில் தாமதம்!

தொல்லியல் துறை ஒப்புதல் கிடைப்பதில் சிக்கல்
மரகத பூங்கா வளாகத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் பூங்கா.

மரகத பூங்கா வளாகத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் பூங்கா.

Updated on
1 min read

மாமல்லபுரம்:​ மாமல்​லபுரம் பழைய சிற்​பக் கல்​லூரி​யின் எதிரில் மரகத பூங்கா வளாகத்​தில் சுற்​றுலா வளர்ச்சிக் கழகம் மற்​றும் தனி​யார் பங்​களிப்​புடன் பல்​வேறு பொழுது​போக்கு அம்​சங்​களு​டன் கூடிய மின் விளக்​கு​ அலங்காரத்தில் ஒளிரும் தோட்​டம், தொல்​லியல்​துறை​யின் ஒப்​புதலை பெறு​வ​தில் ஏற்​பட்​டுள்ள சிக்​கலால் திறக்​கப்​ப​டா​மல் உள்​ளது.

பல்லவ மன்​னர்​களின் கலைச்​சின்​னங்​களாக விளங்​கும் கடற்​கரை கோயில், ஐந்​து ரதம், அர்ஜூனன் தபசு உள்ளிட்ட குட​வரை சிற்பங்​களை கண்டு ரசிப்​ப​தற்​காக, ஏராள​மான சுற்​றுலாப் பயணி​கள் வந்து செல்​வ​தால், மாமல்லபுரம் சர்​வதேச சுற்​றுலாத் தலமாக விளங்கி வருகிறது.

இந்​நிலை​யில், கூடு​தலாக சுற்​றுலாப் பயணி​களை ஈர்க்​கும் வகை​யில், சுற்​றுலா வளர்ச்​சிக் கழகம் இணைந்து தனி​யார், பொது பங்​களிப்​புடன் ரூ. 8 கோடி மதிப்​பில் மாமல்​லபுரம் பழைய சிற்​பக்​கல்​லூரி சாலை​யில் உள்ள 2.47ஏக்​கர் பரப்​பள​வில் உள்ள மரகத பூங்​கா​வில், 10 லட்​சம் மின் ​விளக்​கு​களால் ஒளிரும் பூக்​கள், மரங்​கள், செல்பி எடுக்​கும் இடங்கள்.

செயற்கை நீரூற்​று, மினி 3டி, 5டி சினிமா அரங்​கம், ஒளிரும் நீர் பூங்​கா, சிறுவர்​களுக்​கான மினி ர​யில் மற்றும் பல் வகை உணவு அரங்குகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. மேலும், மான், முயல், ரோஜா தோட்​டம் உட்பட பல்​வேறு வகை​யான பொழுது​போக்கு அம்​சங்களு​டன் கூடிய ஒளிரும் பூங்​கா​வாக அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இப்​பணி​கள் அனைத்​தும் நிறைவடையும் நிலை​யில் உள்​ள​தால் மேற்​கண்ட பூங்கா விரை​வில் பொது​மக்களின் பயன்பாட்டுக்கு திறப்​ப​தற்கு தயா​ராக உள்​ளது. இதன்​மூலம், கூடு​தலான சுற்​றுலாப் பயணி​கள் மாமல்​லபுரத்​துக்கு வரக்​கூடும் என சுற்​றுலாத்​துறை சார்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஆனால், தொல்​லியல்​துறை​யின் 100 மீட்​டர் வரையறுக்​கப்​பட்ட பகு​தி​யில் ஒளிரும் பூங்கா அமைந்​துள்​ள​தால், கட்​டு​மான பணி​களை மேற்​கொள்​வதற்கு முன்பு துறை சார்ந்த ஒப்​புதல் பெற​வில்லை எனக்​ கூறப்​படு​கிறது. இதனால், தொல்​லியல்​துறை​யின் ஒப்​புதல் பெற​முடி​யாமல் பூங்காவை பயன்​பாட்​டுக்கு திறக்க முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது.

இதுகுறித்​து, சுற்​றுலாத்​துறை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: ஒளிரும் தோட்​டத்தை திறப்​ப​தற்​காக தொல்​லியல்​துறை​யின் ஒப்​புதல் பெறு​வதற்​கான அனைத்து பணி​களும் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. விரை​வில் திறப்பு விழாவுக்​கான அறி​விப்​பு​கள்​ வரும்​ என நம்​புகிறோம்​.

<div class="paragraphs"><p>மரகத பூங்கா வளாகத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் பூங்கா.</p></div>
உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்களாக அறிவிப்பதா? - மார்க்சிஸ்ட், விசிக கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in