வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு 77,000 சுற்றுலா பயணிகள் வருகை

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு 77,000 சுற்றுலா பயணிகள் வருகை
Updated on
1 min read

மதுராந்தகம்: செங்கை மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் ஏரியின் நடுவே பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு, ஆஸ்திரேலியா, சைபீரியா, பாகிஸ்தான், நியுசிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த பறவைகள் ஆண்டுதோறும், சீசன் காலங்களாக கருதப்படும் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் சரணாயலத்துக்கு வந்து ஏரியில் உள்ள மரக்கிளைகளில் கூடுகட்டி தங்கி, முட்டையிட்டு குஞ்சு பொறித்து மீண்டும் தாய்நாடு திரும்பி செல்கின்றன.

இதனால், சரணாலயத்துக்கு வரும் பறவைகளை கண்டு ரசிப்பதற்காக ஆண்டுதோறும் சீசன் நாட்களில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பறவைகள் ஆர்வலர்கள், பள்ளி மாணவர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நடப்பாண்டில் வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு வெளிநாட்டு பறவைகள் உட்பட 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் ஏரியின் மரக்கிளைகளில் உள்ள கூடுகளில் தங்கியிருந்து, முட்டையிட்டு குஞ்சு பொறித்து திரும்பி சென்றுள்ளன.

மேலும், பறவைகளை கண்டு ரசிப்பதற்காக உள்ளூரைச் சேர்ந்த சிறுவர் மற்றும் பெரியவர்கள் என 76,602 பேர் மற்றும் வெளிநாட்டினர் 282 பேர் வந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in