Published : 13 Apr 2023 06:05 AM
Last Updated : 13 Apr 2023 06:05 AM

கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் காட்டு யானைகள்: சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை

கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் மீண்டும் யானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பேரிஜம் ஏரியும் ஒன்று. இங்கு வனத்துறையின் அனுமதி பெற்ற பிறகே சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியும். கடந்த வாரம் பேரிஜம் ஏரிப்பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள் இடம் பெயர்ந்து சென்றதையடுத்து, ஏப்.7 முதல் ஏப்.11 வரை சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.

இந்நிலையில் நேற்று காலை முதல் ஒரு குட்டியுடன் 5 யானைகள் மீண்டும் ஏரி பகுதியில் முகாமிட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்தனர். இதனால் ஆர்வமுடன் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

யானைகள் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இன்று (ஏப்.13) யானைகள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றால் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x