Published : 17 Dec 2021 03:06 AM
Last Updated : 17 Dec 2021 03:06 AM

தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ.352 கோடி :

சென்னை

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதிரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தொகுதி மேம்பாட்டு நிதி விடுவிக்கப்படாமல் இருந்தது.

இதற்கிடையில், தொகுதியில் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு பணிகளை கண்டறிந்து செயல்படுத்தும் வகையில் ஒதுக்கப்படும் இந்தநிதியை விடுவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கடந்த டிச.2-ம் தேதி வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், 2021-22 ஆண்டுக்கான சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியில் 50 சதவீதம் என்ற அடிப்படையில் ரூ.352.50 கோடியை விடுவித்துதமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x