விபத்தை விமர்சித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது :

விபத்தை விமர்சித்த  நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது :
Updated on
1 min read

குன்னூரில் நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி உயிரிழந்த சம்பவம் குறித்து தவறாக விமர்சித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை கீரனூர் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் காரணமாக இருக்கலாம் என நாம் தமிழர் கட்சியின் விராலிமலை தொகுதி செய்தி தொடர்பாளரான புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் துவரவயலைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(40) முகநூலில் கருத்து பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, பாஜகவின் பிறமொழி தொடர்பு பிரிவின் மாவட்டத் தலைவர் கே.ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில், பாலசுப்பிரமணியன் மீது கீரனூர் போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நேற்று அவரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in