Published : 07 Dec 2021 03:07 AM
Last Updated : 07 Dec 2021 03:07 AM

கரோனா கட்டுப்பாடு அரசாணைகளை ரத்து செய்வதுடன் - ரூ.5 லட்சம் நிவாரணம் தரக் கோரியவருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்தது நீதிமன்றம் :

கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பான அரசாணைகளை ரத்து செய்யக் கோரியும், ஊரடங்கால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புக்காக தனக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி கேட்டும் மனுத் தாக்கல் செய்தவருக்கு ரூ.1.50 லட்சம்அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த எம்.தவமணி (63), உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: கரோனா உயிர்கொல்லி நோய்அல்ல. குணப்படுத்தக் கூடிய சாதாரண நோய்தான். சுகாதாரத் துறை விழிப்புடன் இருந்து மக்களுக்கு உரிய சிகிச்சை அளித்தால் கரோனாவை குணப்படுத்திவிட முடியும். அதற்கு பதிலாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

எனவே, கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பான அரசாணைகளை அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும். ஊரடங்கால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புக்காக எனக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

மீண்டும் மனுத் தாக்கலா?

இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா என்பது தொடர்பான விசாரணை, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வில் நடைபெற்றது. மனுதாரர் எம்.தவமணி நேரில் ஆஜராகி வாதாடினார்.

அதன் பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: முதலில் மனுதாரர் பொதுநல நோக்கத்துடன் மனுத் தாக்கல் செய்துள்ளாரா? அல்லது வேறு வேலை இல்லாத நிலையில் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்தில் வந்துள்ளாரா என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

இந்த மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என ஏற்கெனவே 3 முறை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், மீண்டும் தற்போது மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நடவடிக்கைகளை மனுதாரர் கண்டித்துள்ளார். மனுதாரரைப் போன்றவர்களின் செயல்பாடுகள் கரோனாவால் உயிரிழந்தவர்கள், கரோனாதடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும்மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது.

விளம்பர நோக்கம்

மனுதாரர் நீதிமன்ற நேரத்தை வீணடித்து, விளம்பரம் தேடும்நோக்கத்தில் மனுத் தாக்கல்செய்துள்ளார். மலிவான விளம்பரத்துக்காக பொதுநலன் மனுத்தாக்கல் செய்வது கண்டனத்துக்குரியது. இந்த மனு, விசாரணைக்குஉகந்தது இல்லை என்பதால் தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இப்பணத்தை அவர் 15நாளில் மதுரை அரசு ராஜாஜிமருத்துவமனை கரோனாவார்டுக்கு தர வேண்டும். தவறினால் மனுதாரரிடம் இருந்துபணத்தை வசூலிக்க மாவட்டஆட்சியர், வருவாய் மீட்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x