திருச்செந்தூர் கோயிலில் பக்தரிடம் 39 பவுன் திருட்டு :

திருச்செந்தூர் கோயிலில் பக்தரிடம் 39 பவுன் திருட்டு :
Updated on
1 min read

காரைக்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற அஞ்சல் துறை ஊழியரான கணேசன்(76), திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் வந்தார்.

நேற்று காலை கோயிலில் தரிசனம் செய்தனர். அப்போது, நகைகள் மற்றும் பணம் வைத்திருந்த பையை கணேசன் தனது தோளில் தொங்க போட்டிருந்தார். தங்கக் கொடிமரம் அருகே வந்தபோது பையில் வைத்திருந்த 39 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரம் பணம் ஆகியவற்றை காணவில்லை.

மூலஸ்தானத்தில் நின்று கணேசன் சுவாமி தரிசனம் செய்தபோது, அவரது தோளில் போட்டிருந்த பையை மர்ம நபர் ஒருவர் பிளேடால் வெட்டி, உள்ளே வைத்திருந்த துணிப்பையோடு நகை மற்றும் பணத்தை திருடும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

திருடப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.14 லட்சம் ஆகும். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in