

மத்திய ஜவுளித் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் நூல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஜவுளி நிறுவனங்கள் மூடப்படுவது டன், வேலையிழப்பு ஏற்படும்.
இறக்குமதி வரி 11 சதவீதம்
எனவே, ஊக வணிகத்தை தவிர்க்க ஏதுவாக பருத்திக்கு விதிக்கப்படும் 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும். சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்னணு ஏலத்தில் பங்கு பெற வசதியாக, வணிகவிதிமுறைகள், நிபந்தனைகளை சீரமைக்க வேண்டும்.
உச்சபட்ச பருத்தி கொள்முதல் காலங்களான டிசம்பர் முதல் மார்ச்வரை 5 சதவீத வட்டி மானியத்தை நூற்பாலைகளுக்கு விரிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.