தமிழகத்தில் புதிதாக 736 பேருக்கு கரோனா தொற்று :

தமிழகத்தில் புதிதாக 736 பேருக்கு கரோனா தொற்று :
Updated on
1 min read

தமிழகத்தில் நேற்று புதிதாக 736 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஆண்கள்444, பெண்கள் 292 என மொத்தம்736 பேர் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 109, சென்னையில் 107 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்து 25,467-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 26 லட்சத்து 80,667 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 772 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர்.

தமிழகம் முழுவதும் 8,337 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசுமற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று 9 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில்கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,463-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,605 பேர் இறந் துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in