Published : 16 Nov 2021 03:07 AM
Last Updated : 16 Nov 2021 03:07 AM

மேட்டூர் அணையில் 40,000 கனஅடி நீர் வெளியேற்றம் : நீர் மட்டம் 120.10 அடியானது

சேலம்

மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 120.10 அடியாக உயர்ந்துஉள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 13-ம் தேதி இரவு முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து, அணையில் இருந்து நீர்வரத்துக்கு ஏற்ப நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 34 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மாலை 4 மணிக்கு மீண்டும் நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

அணையில் இருத்து அணை மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடியும், 16 கண் மதகு வழியாக 18 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 300 கனஅடியும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 120.10 அடி, நீர் இருப்பு 93.63 டிஎம்சியாக உள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று நீர் வரத்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. 14-ம் தேதி மாலை விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மாலையில் விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி அளவில் நீர்வரத்து இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x