Published : 15 Nov 2021 07:11 AM
Last Updated : 15 Nov 2021 07:11 AM

புதுக்கோட்டையில் பொதுக்கூட்ட மேடையில் - தொண்டருக்கு குடை பிடித்த எம்எல்ஏ :

புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்ட மேடையில் மழையில் நனைந்தபடி பேசிய தொண்டருக்கு, அக்கட்சியின் எம்எல்ஏ குடை பிடித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர மாநாடு போஸ் நகரில் உள்ள மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதை்த் தொடர்ந்து, அன்று இரவு பி.யு.சின்னப்பா பூங்காவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முன்னாள் நகரச் செயலாளர் அடைக்கலசாமி தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், கந்தர்வக்கோட்டை எம்எல்ஏவுமான எம்.சின்னதுரை பேசினார்.

இவருக்குப் பிறகு, கட்சி உறுப்பினர் ஜெகன் நன்றி தெரிவித்து பேசினார். அவர் பேசத் தொடங்கியதும் மழை பெய்யத் தொடங்கியது.

இதனால், அவர் மழையில் நனையாமல் இருக்க, ஜெகன் பேசி முடிக்கும் வரை மேடையில் இருந்த எம்எல்ஏ சின்னதுரை அவருக்கு குடை பிடித்தபடி நின்றார். இது கட்சித் தொண்டர்களையும் பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்தவர்களையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x