Published : 12 Nov 2021 03:15 AM
Last Updated : 12 Nov 2021 03:15 AM

தமிழக உரிமையை திமுக விட்டுக்கொடுத்ததாக புகார் :

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னை தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. நிரந்தரமான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். பெங்களூருவில் மழை பெய்த அரை மணி நேரத்தில் தண்ணீர் வடிந்துவிடுகிறது. அதுபோன்று நிரந்தத் தீர்வு காண வேண்டும்.

பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை திமுக அரசு விட்டுக் கொடுத்துள்ளது. நீட் தேர்வில்கூட மாநில உரிமை குறித்து பேசும் திமுக, கேரள அரசிடம் மாநில உரிமையை விட்டுக் கொடுத்துள்ளது. கம்யூனிஸ்ட் கூட்டணியில் உள்ளது என்பதற்காக விட்டுக் கொடுத்துள்ளனர். இதே அங்கு பாஜக அரசு இருந்திருந்தால் இப்படி விட்டிருப்பார்களா? என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x