அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிப்போரிடம் - சொத்து, வழக்கு விவரம்பெற தேவையில்லை : உயர் நீதிமன்றம் உத்தரவு

அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிப்போரிடம்  -  சொத்து, வழக்கு விவரம்பெற தேவையில்லை :  உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

நெல்லையைச் சேர்ந்த பாலாஜி கிருஷ்ணசாமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிப்போரிடம் அவர்களது சொத்து, வழக்கு விவரங்கள் குறித்த பிரமாணப் பத்திரங்களைப் பெற உத்தரவிட கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், இதுபோன்ற கடுமையான நிபந்தனைகளை விதித்தால் அறங்காவலர் பணிக்கு விண்ணப்பிக்க யாரும் முன்வர மாட்டார்கள் என்றார்.

இதையடுத்து, அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்? சொந்த வீடு உள்ளதா என்பன உள்ளிட்ட விவரங்களை ஏன் கேட்க வேண்டும்? அறங்காவலர்களாக நியமிக்கப்பட்ட பிறகு அந்த விவரங்களை பெறலாம். தற்போது பிரமாணப் பத்திரம் கேட்க வேண்டியதில்லை. விண்ணப்பத்தில் தேவையான விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட நீதிபதிகள், தீர்ப்பை தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in