சங்கராபுரம் விபத்தில் 7 பேர் உயிரிழப்பு - பட்டாசு கடை உரிமையாளர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்கு :

சங்கராபுரம் விபத்தில் 7 பேர் உயிரிழப்பு   -  பட்டாசு கடை உரிமையாளர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்கு :
Updated on
1 min read

சங்கராபுரம் பட்டாசுக் கடை விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், அதன் கடை உரிமையாளர் மீது 5 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் செல்வகணபதி என்பவர் நடத்தி வந்த பட்டாசுக் கடையில் கடந்த 26-ம் தேதி இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அந்தக் கடை மற்றும் அருகில் பேக்கரி கடை உள்ளிட்டகட்டிடங்கள் இடிந்து, 7 பேர் உயிரிழந்தனர்.

மேலும் உரிமையாளர் செல்வகணபதி உள்ளிட்ட 11 பேர் விபத்தில் காயமடைந்த நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து சங்கராபுரம் கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் அளித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அதிக அளவில் வெடிபொருட்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in