Published : 16 Oct 2021 06:11 AM
Last Updated : 16 Oct 2021 06:11 AM

ஒடிஷா நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி உற்பத்தியை - 2 கோடி டன்னாக அதிகரிக்க என்எல்சி இந்தியா முடிவு :

நிலக்கரித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய ஒடிஷா மாநிலத்தில் உள்ள தலபிரா சுரங்கத்தில் நிலக்கரி உற்பத்தியை ஆண்டுக்கு 2 கோடி டன்னாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக என்எல்சி இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிறுவனம் பழுப்பு நிலக்கரியை மட்டும் அகழ்ந்தெடுத்து மின்சக்தி உற்பத்தி செய்த நிலையில், 2016-ல் மத்திய நிலக்கரி அமைச்சகம், ஒடிஷா மாநிலம் தலபிரா பகுதியில் நிலக்கரிச் சுரங்கப் பகுதி-2 மற்றும் 3-ஐ அந்நிறுவனத்துக்கு ஓதுக்கீடு செய்தது. அதைத் தொடர்ந்து, அங்கு நிலக்கரி எடுக்கும் பணியைஎன்எல்சி செய்து வருகிறது.

இங்கு நடப்பு ஆண்டில் 40 லட்சம் டன் வெட்டி எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் பணியாற்றும்போது, தற்போது நிலக்கரித் தேவை தொடர்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை சரிகட்ட, நடப்பு நிதி ஆண்டிலேயே ஆண்டுக்கு 60 லட்சம் டன்னாக அதிகரிக்கும் வகையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அதன் அடுத்தகட்டமாக உற்பத்தியை மேலும் அதிகரித்து, நடப்பு நிதி ஆண்டின் நிறைவுக்குள் ஆண்டுக்கு ஒரு கோடி டன்வெட்டி எடுக்கவும், அடுத்த 2022-23ம் நிதி ஆண்டில் அதனைஆண்டுக்கு 2 கோடி டன்னாகஅதிகரிக்கும் நடவடிக்கைகளையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x