Published : 14 Oct 2021 05:55 AM
Last Updated : 14 Oct 2021 05:55 AM

நேரடி வரிகளை வசூலிக்க - கரூர் வைஸ்யா வங்கிக்கு ரிசர்வ் வங்கி அனுமதி :

மத்திய நேரடி வரிகள் வாரியம் சார்பில், நேரடி வரிகளை வசூலிக்ககரூர் வைஸ்யா வங்கிக்கு (கேவிபி) ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

இந்த அனுமதி கிடைத்ததை அடுத்து, மத்திய நேரடி வரிகள் வாரியத்துடன் ஒருங்கிணையும் செயல்முறைகளை கேவிபிதொடங்கியுள்ளது. இப்பணிநிறைவு பெற்றவுடன், மக்கள் தங்களின் நேரடி வரிகளை கரூர் வைஸ்யா வங்கியின் அனைத்து கிளைகள் மூலமும், நெட் பாங்கிங் மூலமும், ‘டிலைட்’ மொபைல் செயலி மூலமும் செலுத்தமுடியும்.

இதுகுறித்து கரூர் வைஸ்யாவங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரிபி.ரமேஷ் பாபு கூறும்போது, “இதுஎங்களது வாடிக்கையாளர்களின் நீண்டகால கோரிக்கையாகஇருந்து வந்தது. தற்போது நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்தசேவையை அளிக்கும் நிலையை எட்டியதற்காக மகிழ்ச்சி அடை கிறோம்” என்றார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x