Published : 14 Oct 2021 05:55 AM
Last Updated : 14 Oct 2021 05:55 AM

தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழி பிரிவுக்கு : சிஇஓ அனுமதிக்கலாம் :

சென்னை

தொடக்கக்கல்வி இயக்குநர்க.அறிவொளி, முதன்மைக் கல்விஅதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: நிதியுதவி பெறும் மற்றும் தனியார் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1-8-ம்வகுப்புகளில் ஆங்கிலவழி பாடப்பிரிவு தொடங்கத் தேவையான அனுமதியை, முதன்மைக் கல்வி அதிகாரிகளே வழங்கலாம்.

அதேநேரம், அவற்றில் 50 சதவீதம் கட்டாயம் தமிழ்வழிப் பிரிவுகளாக இருக்க வேண்டும். ஒரு பள்ளியில் 4 பிரிவுகள் இருப்பின், தமிழ்வழி மற்றும் ஆங்கிலவழிக்கு தலா 2 பிரிவுகளாக செயல்பட அனுமதி வழங்கலாம். 3 பிரிவுகள் இருந்தால் 2 தமிழ், ஒரு ஆங்கிலவழி பிரிவுசெயல்பட அனுமதிக்க வேண்டும். ஒரு பிரிவு மட்டும் செயல்பட்டால், அது தமிழ்வழி பிரிவாகவே செயல்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x