Published : 09 Oct 2021 03:10 AM
Last Updated : 09 Oct 2021 03:10 AM

கூடங்குளம் முதலாவது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தம் :

கூடங்குளத்தில் தலா ஆயிரம்மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணுஉலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் நெல்லைஅருகே அபிஷேகப்பட்டியில் உள்ள மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டு தென் மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

முதலாவது அணுஉலை கடந்த ஜூன் 22-ம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டது. இப்பணிகளுக்குப் பின்பு கடந்த செப்.2-ம் தேதிமின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. இந்நி்லையில் இந்த அணுஉலையில் நேற்று மதியம் 1 மணியளவில் அணுஉலை டர்பனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதேநேரம் 2-வது அணு உலையில் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x