திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் துப்பாக்கியை பரிசோதித்தபோது - குண்டு வெடித்து 2 ஊழியர்கள் காயம் :

திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் துப்பாக்கியை பரிசோதித்தபோது  -  குண்டு வெடித்து 2 ஊழியர்கள் காயம் :
Updated on
1 min read

திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் புதிதாக தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை பரிசோதித்தபோது குண்டுகள் வெடித்ததில் ஊழியர்கள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு அருகே துப்பாக்கி தயாரிக்கும் படைக்கலன் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்பட்ட ஏ.எம்.ஆர் ரக துப்பாக்கியை தொழில்நுட்ப பணியாளர்கள் நேற்று பரிசோதித்தனர். அப்போது எதிர்பாராமல் துப்பாக்கியில் இருந்து குண்டுகள் வெடித்து வெளியேறின.

இதில் தொழில்நுட்பப் பணியாளர்களான துப்பாக்கித் தொழிற்சாலை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (42), காட்டூர் பாத்திமா நகரைச் சேர்ந்த அழகேசன் (57) ஆகியோருக்கு கைகளில் லேசான காயம் ஏற்பட்டது.

இருவரும் துப்பாக்கித் தொழிற்சாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சியில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவம் குறித்து நவல்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in