கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் நானல்ல' :

கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் நானல்ல' :
Updated on
1 min read

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரின் விடுதலையில், மாநில சட்டத்துறை அமைச்சரின் செயல்பாடானது கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் போன்று உள்ளது’’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆலங்குடி அருகே செய்தியாளர்களிடம் சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியதாவது: 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலினை விட வேறு யாரும் அதிக அக்கறை செலுத்த முடியாது. அதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கழுவுற மீனில் நழுவுற மீன் நானல்ல. நாங்கள் மிக நேர்மையானவர்கள் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in