கோடநாடு வழக்கில் கனகராஜ் நண்பரிடம் போலீஸ் விசாரணை :

கோடநாடு வழக்கில் கனகராஜ் நண்பரிடம் போலீஸ் விசாரணை :
Updated on
1 min read

கோடநாடு வழக்கு விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கின் 40-வது சாட்சியான, உயிரிழந்த கனகராஜின் நெருங்கிய நண்பரான குழந்தைவேலுவை சென்னையில் இருந்து வரவழைத்து, மேற்கு மண்டல ஐஜி சுதாகர், எஸ்பி ஆஷிஸ் ராவத் மற்றும் தனிப்படை போலீஸார் நேற்று 5 மணி நேரம் விசாரித்தனர். சிவன் என்பவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

போலீஸார் கூறும்போது, ‘‘4 ஆண்டுகளாகிவிட்டதால் ஆதாரங்கள் பழையதாகிவிட்டன. இதனால், மீண்டும் முழு விசாரணை நடத்தப்படுகிறது. கனகராஜுடன் தங்கியிருந்த சிவன் மற்றும் குழந்தைவேலுவிடம் விசாரணை நடத்தப்பட்டது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in