ஏரியில் மூழ்கி 3 சிறுவர் உயிரிழப்பு :

ஏரியில் மூழ்கி 3 சிறுவர் உயிரிழப்பு :
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம், வெறையூரை அடுத்த ஆருத்ராபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கார்த்திகேயன் மகன் தரணிதரன் (4-ம் வகுப்பு), ஜெயபிரகாஷ் மகன் விக்னேஷ்வரன் (2-ம் வகுப்பு), வீரமணிமகன் வீரன் (எல்கேஜி).

பெற்றோர் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் அதே கிராமத்தில் வேலைக்கு சென்றிருந்த நிலையில், 3 சிறுவர்களும் அருகில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். தண்ணீர் அதிகம் உள்ள பகுதிக்குச் சென்றவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். வேலைக்குச்சென்ற பெற்றோர் வீடு திரும்பி சிறுவர்களை தேடும்போதுதான், 3 சிறுவர்களும் நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

பின்னர், வெறையூர் போலீஸார் வந்து கிராமத்தினர் உதவியுடன் சிறுவர்களின் உடல்களைமீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வெறையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in