ஏலகிரி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க தாமதம் ஆனதால் - இளைஞரை தாக்கி ரூ.46 ஆயிரம் பறிப்பு : எஸ்ஐ மகன் உட்பட 5 பேர் கைது

எஸ்.ஐ. மகன் ஆர்.பிரசாந்த்
எஸ்.ஐ. மகன் ஆர்.பிரசாந்த்
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (30). இவர், ஏலகிரி மலை புங்கனூர் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சென்றார். ஏடிஎம் மையத்தின் உள்ளே சென்ற கணேஷ் ஏடிஎம் கார்டு மூலம் ரூ.46 ஆயிரம் பணம் எடுத்தார்.

அப்போது, அதே ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வெளியே 5 பேர் காத்திருந்தனர். கணேஷ் பணம் எடுக்க தாமதமானதால் வெளியே காத்திருந்த இளைஞர்கள் ஆத்திரமடைந்து கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று எவ்வளவு நேரம் பணம் எடுப்பாய்? எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர், 5 பேரும் ஒன்று சேர்ந்து கணேஷை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த 1 செல்போன், ரூ.46 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பியோடினர். படுகாயமடைந்த கணேஷை, மலைவாழ் மக்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மலைவாழ் மக்கள் போராட்டம்

தகவலறிந்த திருப்பத்தூர் டிஎஸ்பி சாந்தலிங்கம், காவல் ஆய்வாளர் லட்சுமி, உதவி காவல் ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சு நடத்தினர்.

விசாரணையில், கிருஷ்ணகிரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவிக்குமாரின் மகன் ஆர்.பிரசாந்த்(28 ), கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த டி. பிரசாந்த் (29), காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (32), சக்தி அமர்நாத்(29), மற்றொரு ஆர்.பிரசாந்த்(30) ஆகியோர் கணேஷை தாக்கியது தெரியவந்தது.

இவர்கள் 5 பேரும் ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்ததும், புங்கனூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக ஏலகிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து எஸ்.ஐ. மகன் பிரசாந்த் உட்பட 5 பேரை நேற்று கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in