Published : 30 Jul 2021 03:14 AM
Last Updated : 30 Jul 2021 03:14 AM

முதல்வர் மீது அவதூறு: அதிமுக நிர்வாகி கைது :

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மகாமூர்த்தி. இவரது மகன் தென்னரசு, அதிமுக ஒன்றிய விவசாய அணிச் செயலாளராக உள்ளார்.

திமுக அரசையும், முதல்வரையும் பற்றி தென்னரசு அவதூறாக ட்விட்டரில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல் பெண்களை பற்றியும் அவதூறான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுஉள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக புலிக்குறிச்சியைச் சேர்ந்த வேல்முருகன் தட்டிக்கேட்டபோது, அவருக்கு தென்னரசு கொலை மிரட்டல் விடுத்தார்.

திருச்சுழி காவல்நிலையத்தில் வேல்முருகன் புகார் செய்தார். திருச்சுழி போலீஸாரின் பரிந்துரையின் பேரில் விருதுநகர் சைபர் கிரைம் போலீஸார், தென்னரசின் சமூக வலைதளப் பதிவுகளை ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர். அதன் அடிப்படையில் தென்னரசு மீது வழக்குப் பதிவு செய்து, அவரை திருச்சுழி போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x