Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM

விற்பனையாளரை ரேஷன் கடைக்குள் பூட்டிய 2 பேர் கைது :

மயிலாடுதுறை மாவட்டம் முதலைமேடு அருகே மகிழியில் உள்ள ரேஷன் கடை விற்பனையாளரான சுகன்யா (35) நேற்று பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், இக்கடையில் விநியோகிக்கப்படும் அரிசி தரமானதாக இல்லை என கூறி, முதலைமேடு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்(27), பாலு(49) ஆகியோர் நேற்று சுகன்யாவுடன் தகராறில் ஈடுபட்டனர். மேலும், கடைக்குள் அத்துமீறி நுழைந்து, சுகன்யாவை கடைக்குள் வைத்து பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதைக் கண்ட அப்பகுதியினர்பூட்டை உடைத்து சுகன்யாவை மீட்டனர். இதுபற்றி சுகன்யா தந்த புகாரின்பேரில், கொள்ளிடம் போலீஸார் பாலு, மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x