Published : 05 Jul 2021 03:12 AM
Last Updated : 05 Jul 2021 03:12 AM

ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு :

ராமநாதபுரம்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் வலைகளை அறுத்து விரட்டினர்.

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு கச்சத்தீவு அருகே இந்தியா- இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 2 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர்,எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாகக் கூறி அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சுமார் 10 விசைப்படகு மீனவர்களின்வலைகளை அறுத்து விரட்டினர். இதுகுறித்து ராமேசுவரம் மீனவர்கள் கூறும்போது, "கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி வலைகளை அறுத்து விரட்டினர்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x