விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல் :

விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல் :
Updated on
1 min read

திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் திருச்சிக்கு வந்தது. அதில் பயணம் செய்தவர்களின் உடைமைகளை விமானநிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது மதுரையைச் சேர்ந்த ராஜா(23) என்பவர் உடைமைகளுக்குள் மறைத்து ரூ.49 லட்சம் மதிப்பிலான 1 கிலோதங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், ராஜாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in