Published : 21 Jun 2021 03:14 AM
Last Updated : 21 Jun 2021 03:14 AM

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்கக்கவச அலங்காரம் :

ஆனி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

நாமக்கல்: ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு சிறப்ப பூஜை நடைபெற்றது.

நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. மாதந்தோறும் தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுவது வழக்கம்.

இதன்படி ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மஞ்சள், குங்குமம், திருமஞ்சள், பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சுவாமிக்கு தங்கக்கவசம் அலங்காரம செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

வழக்கமாக சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபடுவார்கள். ஆனால் தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் பக்தர்கள் யாரும் பூஜையில் பங்கேற்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x