Published : 13 Jun 2021 03:12 AM
Last Updated : 13 Jun 2021 03:12 AM

அரியலூரில் 2 பேர் தவறுதலாக ஜாமீனில் விடுவிப்பு :

அரியலூர் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 30-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதில், 24 பேருக்கு ஜெயங்கொண்டம் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. அதில் 5 பெயர்கள் கொண்ட ஒரு கோப்பில், வேளாங்கண்ணி ராபர்ட்(36), பாலகுமார்(22) நீங்கலாக மீதமுள்ள 3 பேரை ஜாமீனில் விடுவிக்கலாம் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததை, சரியாக கவனிக்காத சிறைக்காவலர்கள் 5 பேரையும் சேர்த்து மொத்தமாக 26 பேரை விடுவித்தனர்.

பிறகு, தவறை உணர்ந்த சிறைக் காவலர்கள், ஜெயங்கொண்டம் போலீஸாருக்கு தகவல் தந்தனர். இதையடுத்து அரியலூரில் நின்றிருந்த 2 பேரையும் பிடித்த போலீஸார் மீண்டும் அவர்களை சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x