Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM
கல்வித் தரத்தில் முதலிடத்தில் இருப்பதால் ‘நீட்’ உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளில் இருந்தும் தமிழகத்துக்கு விலக்குஅளிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் நேற்றுஎழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மத்திய பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறை வெளியிட்ட 2019-20 ஆண்டுக்கான செயல் தர குறியீட்டு வரிசையில் ‘ஏ பிளஸ் பிளஸ்’ தர அந்தஸ்து பெற்று, அகில இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.
பல்வேறு கூறுகளின் அடிப்படையில் மத்திய அரசு வெளியிட்ட அந்த குறியீட்டில் தமிழக கல்வித் தரம் வெகு சிறப்பாக இருக்கிறது.
இந்நிலையில், மருத்துவ படிப்பு உள்ளிட்ட அனைத்து விதமான தொழில் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு தனியாக நுழைவுத் தேர்வு நடத்திமாணவர்களின் திறமையை சோதிக்க வேண்டிய தேவையில்லை.
எனவே, நீட் உட்பட அனைத்து பொது நுழைவுத் தேர்வுகளில் இருந்தும் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை சேர்க்கஅனுமதிக்க வேண்டும். தற்போதைய கரோனா சூழலில் பிளஸ் 2தேர்வுக்கு மதிப்பெண் அளிக்க அமைக்கப்பட்ட குழு வழங்கும் மதிப்பெண்ணை கணக்கில் கொள்ளுமாறும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில்ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT