Published : 10 Jun 2021 03:11 AM
Last Updated : 10 Jun 2021 03:11 AM

வங்கக் கடலில் : காற்றழுத்த தாழ்வு பகுதி : நாளை உருவாக வாய்ப்பு :

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வடக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 11-ம் தேதி (நாளை) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் தாக்கம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் வரும் 13-ம்தேதி வரை தெற்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்திலும், மத்திய வங்கக் கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள், வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் 60 கிமீ வேகத்திலும் பலத்த காற்று வீசக் கூடும்.எனவே மேற்குறிப்பிட்ட தேதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட்டை ஒட்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x