மேட்டூர் அணையை திறக்க கோரிக்கை :

மேட்டூர் அணையை திறக்க கோரிக்கை  :
Updated on
1 min read

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: மேட்டூர் அணையில் தற்போது 98 அடி நீர் இருப்பு உள்ளது. எனவே, டெல்டாவில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஜூன் 12-ல் திறப்பதற்கான முடிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனே அறிவிக்க வேண்டும்.

குறுவை சாகுபடிக்கான அடிப்படை பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். கோடை உழவு செய்வதற்கு வேளாண் பொறியியல் துறை மூலமாக காவிரி டெல்டாவுக்கு கூடுதல் டிராக்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். உர விலை குறித்து அரசுகள் தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in